கொரொனா வைரஸின் தாக்குதலினால் சீனாவே கதிகலங்கி போயிருக்கிறது. இதுவரை கொரோனா வைரஸின் தாக்குதலினால் 500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டிலும் பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக வெளியான தகவல் மக்களை பீதியடைச் செய்துள்ளது. ஆனால் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பபதாக உறுதியான தகவல் இல்லை. கொரோனாவிற்கு தீர்வாக எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை என்பது மக்களின் அதிர்ச்சிக்கு காரணம்.
இந்நிலையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், இந்துத்துவ அமைப்புகள் மாட்டு யூரின் கேன்சரை குணப்படுத்தும் என்று சொன்னது, உலக வெப்பமயமாக்கலை தடுக்க உலக உருண்டை மீது தண்ணீர் ஊற்றியது குறித்த பதிவை பகிர்ந்து இந்த டெக்னிக் கொரொனோ வைரஸை கொல்லுமா?'' என்று நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Will this technic also kill coronavirus? 🤔🤔🤔🤣🤣🤣🤪🤪🤪🤪 https://t.co/o8QobNHulg
— KhushbuSundar ❤️ (@khushsundar) February 7, 2020