www.garudabazaar.com

Riya Kumari : நடுரோட்டில் நடிகை சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு ட்விஸ்ட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் நடிகர் ரியா குமாரி.  இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வழிப்பறி கொள்ளையர்களால், அவருடைய கணவர் முன்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் அந்த நேரத்தில் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

jharkhand riya kumari murder case husband arrested reportedly

நடிகர்  நியா குமாரி, அவருடைய கணவர் மற்றும் இவர்களுடைய மகளுடன் கொல்கத்தாவில் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அதன்படி, திடீரென்று காரில் சென்று கொண்டிருந்த இவர்களை வழிமறித்த மூன்று நபர்கள் இவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளை அடித்தது மட்டுமின்றி, இந்த கொள்ளை சம்பவத்துக்கு ஒத்துழைப்பு தராததால் நடிகை ரியா குமாரியை அந்த இடத்திலேயே துப்பாக்கிகள் சுட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர். பின்னர் ரியா குமாரியின் கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.

ஆனாலும் ரியா குமாரி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். அதன்படி தப்பி சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் இன்னொரு புறம் சந்தேகத்தின் அடிப்படையில் ரியா குமாரியின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

jharkhand riya kumari murder case husband arrested reportedly

இந்நிலையில்தான், தற்போது ரியா குமாரியின் கணவர் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படும் நிலையில் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். எனினும் ரியா குமாரி கொலை செய்யப்பட்ட விவகாரத்துக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக இன்னும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

jharkhand riya kumari murder case husband arrested reportedly

People looking for online information on Jharkhand, Murder case, Riya Kumari will find this news story useful.