www.garudabazaar.com

"பொய்யா பழகுறாங்க, என் பின்னாடியும் பேசுவாங்க".. ஆனா அமுது மட்டும்.. Janany சொன்ன விஷயம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

Janany about her friendship with amudhavanan in bigg boss house

Also Read | "நான் பார்த்திருந்தா அப்படி நடந்திருக்காது".. விக்ரமன் சர்ச்சைக்கு ஜனனி விளக்கம்.. Exclusive

இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

Janany about her friendship with amudhavanan in bigg boss house

அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. முன்னதாக, பிக்பாஸ் இறுதி சுற்று வரை முன்னேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜனனி, கடந்த வார இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். ஜனனி பாதியில் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.

Janany about her friendship with amudhavanan in bigg boss house

இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை ஜனனி அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்தும், தனது கேம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை ஜனனி பகிர்ந்து கொண்டார்.

நாமினேஷன் காரணமாக, உள்ளே இருப்பதே பயமாக இருந்தது என குறிப்பிட்ட ஜனனி, பேசினாலும் பயம், பேசாமல் இருந்தாலும் பயம், சண்டை போட்டாலும் பயம்  என கூறி, எப்படி இருந்தாலும் வந்து சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

Janany about her friendship with amudhavanan in bigg boss house

அதே போல, அமுதவாணனுடன் அதிகம் நட்பாக பழகுவது குறித்தும் சில விஷயங்களை பேசி உள்ளார். பிக்பாஸ் வீட்டில் அமுதவாணன் மற்றும் ஜனனி ஆகியோர் நட்பாக இருப்பது பற்றி மற்ற போட்டியாளர்கள் நிறைய கருத்துக்களை முன் வைத்து வந்தனர்.

இந்த நிலையில், அமுதவாணனுடனான நட்பு குறித்து தற்போது பேசிய ஜனனி, "எல்லாரும் பொய்யா பழகுறாங்க, ஒரு கட்டத்துக்கு மேல என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனா அமுதுவை பொறுத்தவரைக்கும் ஒரு நட்பை தாண்டி, எனக்கு ஒரு அண்ணா மாதிரி. நிறைய Care பண்ணும். எனக்கு நிறைய தடவ அட்வைஸும் சொல்லி இருக்கு. நான் பேசுறதுனால டாஸ்க் ஒழுங்கா பண்ணாலும் சப்போர்ட் முடியலன்னு அமுது சொல்லுவாங்க. மத்தவங்க பொய்யா பழகுறாங்க. என் பின்னாடியும் நிறைய பேரு பேசுவாங்க. ஆனா அமுது உண்மையா பழகுறாரு. அதுக்காகவே அவருகிட்ட பேசுவேன்" என ஜனனி கூறி உள்ளார்.

Also Read | கண்ணீர் விட்டு கதறிய மனுசன்.. கட்டியணைச்சு ஆறுதல் சொல்லும் விக்ரமன்.. bigg boss 6

தொடர்புடைய இணைப்புகள்

Janany about her friendship with amudhavanan in bigg boss house

People looking for online information on Amudhavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Janany, Vijay Television, Vijay tv will find this news story useful.