www.garudabazaar.com

"இன்னைக்கு EPISODE எப்படி இருந்துச்சு?" - சுந்தரி சீரியல் குறித்து நடிகை கேப்ரில்லா வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவி சேனலில்  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

Gabriella Instagram Post about Sundari Serial Today Episode

Images are subject to © copyright to their respective owners.

இந்த சீரியலில் நடிகை கேப்ரில்லா கதாநாயகியாக நடித்து வருகிறார். ஜிஸ்னு மேனன், கார்த்திக் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை ஶ்ரீ கோபிகா, அனு எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலின் ரீமேக்காக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

சுந்தரியின் கணவர் கார்த்திக், சுந்தரிக்கு தெரியாமல், அனுவை இரண்டாவதாக திருமணம் செய்து, அதனை இரண்டு மனைவிகளிடமும் மறைத்து வாழ்ந்து வந்தார். இதனிடையே சென்னையில் சுந்தரி ஒரு தனி வீட்டில் வசித்து வர, கார்த்தியோ சுந்தரியை அவ்வப்போது வந்து பார்ப்பதும், அனுவுடனேயே பெரும்பாலான நேரங்களை செலவிடுவதுமாய் இருந்து வந்தார்.

இதுகுறித்து எதுவும் தெரியாத சுந்தரியோ கார்த்திக்கின் இரண்டாவது மனைவியான அனுவின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். சுந்தரியும் அனுவும் மிக நெருக்கமாகவும் ஒருவரின் மீது ஒருவர் அளவு கடந்த அன்பும் வைத்திருந்தனர்.

Gabriella Instagram Post about Sundari Serial Today Episode

Images are subject to © copyright to their respective owners.

சுந்தரி அனுவின் அலுவலகத்தில் பணிபுரிந்தபடியே கலெக்டராக வேண்டும் என்ற தன்னுடைய கனவுகாக பகுதி நேரமாக படித்தும் வந்தார்.  கார்த்திக், தான் வெளிநாட்டுக்கு வேலை செய்ய செல்கிறேன் என சுந்தரியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் சொல்லிவிட்டு சுந்தரியிடம் இருந்து பிரிந்து அனுவுடனேயே வாழ ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் சுந்தரிக்கு இந்த விஷயம் தெரிந்து விட கார்த்தி மீது கோபமடைந்து கார்த்தியை விட்டு பிரிகிறார். ஆனால் அவருடைய குடும்பத்தினருக்கு கார்த்தியுடன் சேர்ந்து வாழ்வது போல நாடகமாடுகிறார். கார்த்தி அனுவுடன் வாழ்வது, கார்த்தியின் தாய் மற்றும் தந்தைக்கு தெரிந்து விடுகிறது. முன்னதாக அனுவின் தாயாருக்கும் தெரிந்து விடுகிறது.

இச்சூழலில் உடல்நிலை மோசமடைந்த ஷங்கர் (கார்த்தியின் அப்பா), சுந்தரி & கார்த்தியிடம் பேசி, சுந்தரியை விட்டு பிரிய மாட்டேன் என சத்தியம் செய்ய சொல்கிறார்.  இதற்கு சம்மதிக்காத கார்த்தி, "அனு & அனு வயிற்றில் வளரும் குழந்தை தான் முக்கியம்" என்கிறார். இதனால் கோபமுற்ற கார்த்தியின் தந்தை ஷங்கர் உயிரிழக்கிறார்.

கணவனின் மரணத்துக்கு கார்த்தி தான் காரணம் என கூறி வீட்டை விட்டு செல்வி வெளியேற்றுகிறார். ஷங்கர் உடலை பிடித்து சுந்தரி & செல்வி அழுகின்றனர். ஷங்கர் இறந்த நிலையிலும் சுந்தரி தேர்வெழுத செல்கிறார். செல்வி, கார்த்தியை ஷங்கருக்கு இறுதிச் சடங்கு செய்யவிடாமல் தடுத்தும் விடுகிறார். இதனால் சுந்தரி இறுதிச் சடங்கு செய்ய குடும்பத்தார் முடிவு செய்கிறார்கள். தேர்வெழுத சென்ற சுந்தரி மாலைக்குள் வந்து இறுதிச்சடங்கில் கலந்து கொள்வாள் என முருகன் ஊர் மக்களிடம் கூறுகிறார். அங்கு வரும் சுந்தரி கொள்ளி குடம் சுமந்து கதறி அழுது தனது மாமனார் ஷங்கருக்கு இறுதிச் சடங்கு செய்கிறார். கிருஷ்ணா, கார்த்திக்கு வீடியோ கால் செய்கிறார். வீடியோவை பார்த்து கார்த்தி அழுகிறார்.

அனு அங்கு வந்து கார்த்திக் அழுவதை கவனிக்கிறாள். தன் தந்தையின் இறுதிச்சடங்கு முடிந்துவிட்டதாக கூற, ஷங்கர் உடலுக்கு கொள்ளி வைத்தது யார் என்று அனு விசாரிக்க, கார்த்தி பதில் சொல்ல மறுக்கிறார். கார்த்தி தொடர்ந்து கண்ணீர் விட, அனு அவருக்கு ஆறுதல் கூற முயல்கிறாள். இச்சூழலில் அனுவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது.

இந்த இறுதி எபிசோடின் இறுதிச்சடங்கு காட்சியை மட்டும் பகிர்ந்த நடிகை கேப்ரில்லா, "கலை மக்களுக்கே".. இன்றைய எபிசோட் எப்படி இருந்தது மக்களே". என இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் மத்தியில்  கேள்வி எழுப்பினார்.

Gabriella Instagram Post about Sundari Serial Today Episode

People looking for online information on Gabriella Sellus, Sundari, Sundari Serial Today 600th Episode, Sundari Suntv Serial will find this news story useful.