www.garudabazaar.com

ஷூட் முடிஞ்சுது.. பட்டாசு வெடிச்சு கொண்டாடிய துல்கர் சல்மான்.. தமிழ்நாட்ல இந்த ஊர்லயா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

Dulquer Salmaan King Of Kotha Shooting Wrapped in Karaikudi

மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி என நான்கு மொழிகளிலும் துல்கர் சல்மான் திரைப்படங்களில் நடித்துள்ளார். இம்மாநிலங்களில் இவருக்கு பரவலாக ரசிகர்களும் உள்ளனர்.

சல்யூட் படத்தினை தொடர்ந்து மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் 'கிங் ஆஃப் கோதா'. 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 ஓணம் அன்று திரைக்கு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தினை  அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார்.

இப்படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஷ்யாம் ஷஷிதரன் செய்கிறார்,  ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

Dulquer Salmaan King Of Kotha Shooting Wrapped in Karaikudi

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு  தமிழ் நாட்டில் மதுரை & காரைக்குடியில்  நடைபெற்றது. நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்  95 நாட்கள் நடந்து முடிந்தது என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் படக்குழுவினர் பட்டாசு வெடிக்கும் வீடியோவை வெளியிட்டு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என அறிவித்துள்ளார். அடுத்தடுத்த அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என்றும் துல்கர் சல்மான் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer Salmaan King Of Kotha Shooting Wrapped in Karaikudi

People looking for online information on Dulquer salmaan, King of Kotha, KOK will find this news story useful.