இயக்குனர் ஷங்கர் வேதனை பதிவு... விபத்தில் உதவி இயக்குனர் மரணம்...'என் இதயமே நொறுங்கி விட்டது'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபகாலமாகவே திரைத்துறை மற்றும் தொலைக்காட்சி சார்ந்த பல பிரபலங்கள் மரணமடைந்து வரும் வேளையில் அடுத்த சோக செய்தி மக்களை தாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள '4ஜி' திரைப்பட இயக்குநர் ஏவி அருண் பிரசாத் என்கிற வெங்கட் பக்கர் கோயம்புத்தூரில் இன்று (15-05-2020) மரணம் அடைந்தார். இவர் இயக்குனர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குனர் ஆவார். அவரது முதல் படம் இன்னும் வெளிவராத நிலையில் இந்த துக்க சம்பவம் நடந்துள்ளது.

விபத்தில் உதவி இயக்குனர் மரணம் இயக்குனர் ஷங்கர் வேதனை பதிவுdirector shankar sad tweet on his assistant director death news

இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் தற்போது தனது டிவிட்டர் தளத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "இளம் இயக்குனர் மற்றும் எனது முன்னாள் உதவு இயக்குரின் இறப்பு செய்தி கேட்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. அவர் மிகவும் இனிமையான, பாசிடிவ் மற்றும் கடின உழைப்பாளர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor