www.garudabazaar.com

இசைப்புயலை சந்தித்த மாரி செல்வராஜ் போட்ட நெகிழ்ச்சி ட்வீட்.. வைரல் PIC.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மாரி செல்வராஜ், இசைப் புயல் ஏஆர் ரஹ்மானை சந்தித்திருக்கிறார். இதுகுறித்து அவர் இட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Director Mari selvaraj Meet AR Rahman for Maamannan

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதலில் ஏற்காட்டிலும் பின்னர் சேலத்திலும் நடைபெற்றது. இதனையடுத்து இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், இசைப் புயல் ஏஆர் ரஹ்மானை சந்தித்திருக்கிறார். அவருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதில், ஏஆர் ரஹ்மானை சந்திக்க பல நாட்கள் தான் காத்திருந்ததாகவும் அதனை மாமன்னன் படம் படம் பூர்த்தி செய்துள்ளதாகவும் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.

அந்த ட்வீட்டில் மாரி செல்வராஜ்,"பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தருணம் வந்துவிட்டது. இது மாமன்னன் மூலம் சாத்தியமாகி உள்ளது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் சாருடன் இணைகிறேன். உதயநிதி சாருக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Mari selvaraj Meet AR Rahman for Maamannan

People looking for online information on AR Rahman, Maamannan, Mari Selvaraj will find this news story useful.