www.garudabazaar.com

"Midnight-ல பலாத்கார மிரட்டல்".. "அந்த பையன் இன்ஃபார்மர்னு தெரிஞ்சுது!" .. BiggBoss மீரா மிதுன் Breaks Out! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பட்டியலின இயக்குநர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பல மாதம் முன்பு பிக்பாஸ் புகழ் நடிகை மீரா மிதுன் கைதானார். பின்னர் சிறையில் இருந்து வெளிவந்து மீரா மிதுன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ள மீரா மிதுன், பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.

biggboss meera mithun first interview after jail life video

அதில், “சர்ச்சைப் புயலான நீங்கள் சென்னையை விட்டு விட்டு பெங்களூரில் மையம் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன?” என்று கேட்கப்பட்டபோது தனக்கு சென்னையில் பாதுகாப்பு இல்லை என்று உணர்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

biggboss meera mithun first interview after jail life video

இதேபோல் சென்னையில் இருக்கும் போது இரவு நேரத்தில் பலரும் கதவை தட்டி பிரச்சனை செய்துள்ளதாகவும், பலாத்கார மிரட்டல் விடுத்ததாகவும், கொலைமிரட்டல் முடிந்து பின்னர் பலாத்கார மிரட்டல் தொடங்கியது தனக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். இதேபோல் ஜெயிலுக்கு சென்று, பிறகு சென்னையில் வந்து வாழ்ந்தபோதும் மீண்டும் ஜெயில் வாழ்க்கையையே வாழ்ந்ததாக உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

biggboss meera mithun first interview after jail life video

குறிப்பாக சிறையில் என்ன நடந்தது? என்பது குறித்து கேட்கும்போது பேசிய மீரா மிதுன், “நான் ஒன்றும் தீவிரவாதி கிடையாது. குற்றவாளி கிடையாது. ஆனாலும் எதற்காக என்னை அப்படி எல்லாம் பிரச்சினை செய்தார்கள் என்று எனக்கு தெரியாது. சிறையிலிருந்த போது பயங்கரமான கொடுமை. சாப்பாட்டை பார்த்தால் எனக்கு வாந்தி வருவது போல் இருந்தது. அந்த சாப்பாட்டை சாப்பிட முடியவில்லை. குறிப்பாக என்னுடைய மாதவிடாய் நேரத்தில் எனக்கு Pad கொடுக்கவில்லை. மிகவும் கொடுமையான ஒரு உணர்வாக அது இருந்தது!” என்று தெரிவித்தார்.

biggboss meera mithun first interview after jail life video

மேலும் பேசியவர், “என்னுடைய அம்மா, நான் மெண்டல் ஆகிவிட்டேனா? உண்மையில் நான் ஒரு ஃபிராடு தானா? என்று கேட்டார். தெருவில் இருக்கும் 10 பேர் பேசுவதை நம்பி பெற்ற பெண்ணை தப்பானவள் என்று பெற்ற அம்மாவையே நம்ப வைப்பார்கள். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. இதில் சைபர் தாக்குதலும் உள்ளது. இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் போது கூட என்னை திட்டி அசிங்க அசிங்கமாக கமெண்ட் பண்ணுவார்கள். நான் மிகவும் மன உளைச்சல் ஆனேன். என்னுடைய உறுதி தளர்ந்தது!” என்று பேசியிருக்கிறார்.

biggboss meera mithun first interview after jail life video

இதேபோல் தான் கைது செய்யப்பட்ட நேரத்தில் தன்னுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட அபிஷேக் என்பவர் தன்னுடைய மேனேஜராக தன்மீது காதல் இருப்பது போல் பழகியதாக குறிப்பிட்ட மீரா மிதுன், அவர் ஒரு இன்ஃபார்மர் என்பது தனக்கு தாமதமாகத்தான் தெரிய வந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.

biggboss meera mithun first interview after jail life video

மேலும், “உண்மையில் அந்த நபருக்கு என் மீது க்ரஷ் இருந்திருந்தால் நான் சிறையில் இருந்து வெளிவந்த போது அவர் என்னை வந்து சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வந்து என்னை சந்திக்கவில்லை. அதிலிருந்தே தெரிகிறது, அவர் அந்த வேலை முடிந்துவிட்டது, காணாமல் சென்று விட்டார் என்று!” என்று மீரா மிதுன் குறிப்பிட்டுள்ளார்.

மீரா மிதுன் அளித்த இன்னும் பல்வேறு பரபரப்பு விஷயங்கள் அடங்கிய முழு பேட்டி வீடியோவை இணைப்பில் காணலாம்.

"MIDNIGHT-ல பலாத்கார மிரட்டல்".. "அந்த பையன் இன்ஃபார்மர்னு தெரிஞ்சுது!" .. BIGGBOSS மீரா மிதுன் BREAKS OUT! வீடியோ வீடியோ

மேலும் செய்திகள்

biggboss meera mithun first interview after jail life video

People looking for online information on சிறை, ஜெயில், பிக்பாஸ், போலீஸ், மீரா மிதுன், Biggboss, Biggboss meera mithun, BiggBossTamil5, Breaking meera mithun, Meera mithun exclusive interview, Meera mithun first ever breaking, Meera mithun first ever interview, Meera mithun interview jail life video, Meera Mitun will find this news story useful.