www.garudabazaar.com

"ஒருநாள் கேப்டனை" நியமித்துவிட்டு ஜெயிலுக்கு போன நிரூப்!... இப்படி ஒரு தளபதியா? #BiggBossTamil5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக டிவி டிபேட் ஷோ டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ரெட் டிவி மற்றும் ப்ளூ டிவி என்கிற 2 செய்தி சேனல்களாக பிரிக்கப்பட்டனர்.

akshara biggboss captain and ameer heartmelt promise to niroop

ஒவ்வொரு சேனலிலும் கள ரிப்போர்ட்டர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கூட்டாக இணைந்து ஒரு நபரின் உண்மை முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டலாம். அப்படி நிரூப் & இமானை வைத்து பிரியங்கா, அபிஷேக், சிபி ஒரு டிபேட் ஷோவை நடத்தினர். அதில் இமான் கருத்து உடன்பாடில்லாமல் வெளியேறினார். 

பின்னர் தாமரையிடம் இதே டாஸ்கை செய்யும்போது, சிபியை தாமரை தங்கப்புள்ள, செல்லப்புள்ள என அழைத்து பேசுவது குறித்து பிரியங்கா விமர்சன தொனியில் பேச, தாமரை கடுப்பாகி களேபரம் செய்ய, முடிவில் இது வெறும் பிராங்க் என்று பிரியங்கா, அபிஷேக், சிபி தரப்பினர் கூட்டாக அறிவித்தனர்.

பின்னர் தாமரை சமாதானம் ஆகாமல் இருந்தபோது டாஸ்க் என்பதை புரிந்துகொள்ள வேண்டும், நாமும் டாஸ்கின் போது இதைத்தான் செய்திருக்கிறோம் என்று பேசி புரியவைக்க முயற்சித்தனர். ஆனால் பின்னர் இப்படி டிவி டிபேட் ஷோக்களின்போது கலாய்த்தது குறித்து நிரூப் பிரியங்காவிடம் கோபப்பட்டதுடன், தன் விருப்பம் இல்லாமல் அவ்வாறு செய்ததாக குற்றம் சாட்டினார்.

ஆனால் அனைவருக்கும் சரியென்றால், அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே டிவி டிபேட் ஷோவில் நிரூப் மற்றும் இமான் பற்றிய ஸ்கிரிப்ட்டை பண்ண போவதாக பிரியங்கா முன்பாக பேசியிருந்த குறும்படத்தை பிக்பாஸிடம் கேட்டிருந்தார்.

இந்நிலையில் ஒவ்வொரு டாஸ்க்கின் முடிவின் போதும் பிக்பாஸ் வழக்கமாக கேட்பதுபோல் இந்த டாஸ்க்கின் முடிவிலும் வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் யார் என்பது குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் கேட்க, அதன்படி பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் நிரூப் மற்றும் பாவனியை குறிப்பிட்டதை அடுத்து இருவரும் சிறை சென்றனர்.

சிறைக்கு செல்லும் முன் அக்‌ஷராவை கேப்டனாக நியமித்த நிரூப், “இந்த ஒரு நாள்ல என்ன தோனுதோ பண்ணு. நாளைக்கு காலைல நான் வந்திடுறேன்” என்று சொன்னார்.

இதேபோல் பாதாள சிறைக்குள் நிரூப் மற்றும் பாவனி இருவரும் சென்ற பின்பு, அமீரிடம் சிறையில் இருந்தபடி பேசிய நிரூப், “நான் வெளிய வந்து எல்லா பிரச்சனைகளையும் முடிக்கிறேன்!” என்றார்.

அப்போது அமீர், “நீ திரும்பி வருவதற்குள் நான் எல்லா பிரச்சனைகளையும் முடித்து வைக்கிறேன்” என குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கேப்டனாக அக்‌ஷராவையும், தளபதியாக அமீரும்  இருக்கிறார்கள். ராஜாமாதா ரம்யா கிருஷ்ணன் இந்த வார இறுதியில் வந்து வறுத்தெடுப்பாரா? என்று ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்

akshara biggboss captain and ameer heartmelt promise to niroop

People looking for online information on நிரூப், நிரூப் பிரியங்கா, பாவனி, பிக்பாஸ், BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Niroop, Pavani will find this news story useful.