Bigg Boss 3 - ‘கைய தொட்டான்.. கால தொட்டான் சொல்லாதீங்க’ - கொந்தளித்த லொஸ்லியா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 39ம் நாளில் மொட்ட கடிதாசி டாஸ்கின் போது கவினுக்காக லொஸ்லியா மற்றும் சாக்ஷி இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

Bigg Boss Tamil 3, Lolsiya apologise sakshi, kavin, love, Hotstar

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இதுநாள் வரை அமைதியாக இருந்த லொஸ்லியாவுக்கு மக்கள் மத்தியில் கூடுதல் செல்வாக்கு உள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்த கவின், சாக்ஷி மற்றும் லொஸ்ளியாவிடம் நெருக்கமாக பழகியது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

தன்னை கழட்டிவிட்டு தன் கண் முன்னரே லொஸ்லியாவின் கைகளை பிடித்துக் கொண்டு செல்வது, பேசும்போது வெட்கப்படுவது, கண்களில் ஒரு விதமான ஃபீலிங்க்ஸ், மணிக்கணக்கில் பேசுவது என்று கவின் செய்த காரியங்கள் தன்னை காயப்படுத்துவதாக சாக்ஷி குற்றம்சாட்டினார்.

சாக்ஷியின் இந்த குற்றச்சாட்டில் ஹர்ட் ஆன லொஸ்லியா, 'கையை பிடித்துக் கொண்டு பேசினார், காலை பிடித்தார் என்றெல்லாம் சொல்லாதீர்கள். எனது லிமிட் என்னவென்று எனக்கு தெரியும். உங்களுக்கு நடந்த துரோகத்திற்கு நான் தான் முழு காரணம். சாக்ஷிக்கு நியாயம் கிடைக்க அனைவரும் போராடுங்கள். தவறு அத்தனையும் என்னுடையது. இந்த வீட்டில் அபிராமியை தவிற வேறு யாரும் என்னுடன் கதைக்காதீர்கள் என மைக்கை தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டார்'. பின்னர் பாத்ரூம் சென்று கதறி அழுத லொஸ்லியாவை அபிராமி சமாதானம் செய்தார்.