Beast Others
www.garudabazaar.com

Bakkiyalakshmi: உணவில் விஷமா..?.. பாக்யா கைது.. கோபியின் சதியா?.. பரபரப்பு எபிசோடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து நடைபெறவுள்ள விஷயம் ஒன்று, தொடரின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Bakkiyalakshmi take over by police after her food issues

மனைவி பாக்கியலட்சுமியை விட்டு விட்டு, ராதிகாவை திருமணம் செய்வதற்கான அனைத்து வழிகளிலும் முனைப்புடன் கோபி செயல்பட்டு வரும் விஷயம், ஏற்கனவே அறிந்தது தான்.

கோபி செய்யும் தில்லாலங்கடி வேலைகள் பற்றி எதுவும் தெரியாமல், ராதிகாவும் அளவு கடந்த அன்பை அவர் மீது செலுத்தி வருகிறார்.

இன்னொரு பக்கம், ராதிகா மற்றும் பாக்கியா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவார். ஆனால், கோபி செய்து வரும் காரியங்கள் அவர்களுக்கு தெரியாது. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை இருந்தும், இருவரிமும் மாட்டாமல் தொடர்ந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார் கோபி.

திட்டம் போட்டு தப்பித்த கோபி

அப்படி ஒரு நிலையில், இந்த முறை கோபி நிச்சயம் ராதிகா மற்றும் பாக்கியாவிடம் சிக்கி விடுவார் என்பதை உறுதி செய்யும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதாவது, ராதிகாவின் மகளான மயூராவின் பிறந்தநாளை முன்னிட்டு, குழந்தைகள் இல்லம் ஒன்றில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், உணவு தயார் செய்து வழங்கும் பொறுப்பினை, பாக்கியாவிடம் ஒப்படைத்திருந்தார் ராதிகா.

கோபியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்பதால், பாக்கியாவும் அங்கு வரவிருப்பதை அறிந்த அவர், தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேலையை பாக்கியாவிடம் கொடுத்து விடுகிறார். முன்னதாக, பாக்கியா தன்னை கண்டு விடுவாள் என்ற பயத்தில் இருந்த கோபி, சமயோஜிதமாக செயல்பட்டார்.

அதே போல, பலமுறை பாக்கியா என்றாலே பார்க்காமல் தப்பித்துக் கொண்டிருந்த கோபியை ராதிகாவும் கிண்டலாக குறிப்பிட்டு வந்தார். ஆனால், மீண்டும் தன்னுடைய திட்டத்தால் கோபி தப்பித்து விட்டார். அப்படி இருக்கும் நிலையில், கோபியை பாக்கியா வீட்டிற்கே அழைத்து சென்று அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் ராதிகா. இதற்காக கோபியையும் வற்புறுத்தி இணங்க வைத்தார். இதனால், கோபி நிச்சயம் மாட்டி விடுவார் என்றே அனைவரும் கருதினர்.

மிகப்பெரிய திருப்புமுனை

அப்படி இருக்கும் நிலையில், மிகப்பெரிய திருப்புமுனை ஒன்று பாக்கியலட்சுமி தொடரில் அரங்கேறவுள்ளது. மயூரா பிறந்தநாளில், ராதிகா மற்றும் கோபி ஆகியோர் உணவளித்த குழந்தைகள் காப்பகத்தில், உணவருந்திய குழந்தைகள் அனைவரும் மயங்கி விழவே, விஷயமறிந்த ராதிகா மற்றும் கோபி ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர்.

தொடர்ந்து, இது பற்றி விவரமறிந்து அங்கு வரும் போலீசார், உணவை தயார் செய்தது யார் என்பது பற்றி ராதிகா மற்றும் கோபியிடம் கேட்க, பாக்கியலட்சுமி குறித்த விவரத்தினை அவர்கள் கூறுகின்றனர். பின்னர், பாக்கியா வீட்டிற்கு சென்று அவரை போலீசார் அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று, ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையையும், அதிர்ச்சியையும் உண்டு பண்ணியுள்ளது.

பாக்கியா வீட்டிற்கு ராதிகா அழைத்து செல்வதாக கூறியதால், இந்த வேலையை கோபியே பார்த்திருப்பாரா அல்லது, சூழ்நிலை காரணமாக இப்படி ஒரு சோதனை பாக்கியாவுக்கு வந்ததா என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இது நிஜமா இல்லை, கோபியின் கனவாக கூட இருக்கலாமா என்றும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bakkiyalakshmi take over by police after her food issues

People looking for online information on Baakiya, Baakiyalakshmi, Baakiyalakshmi Episode, Gopi, Radhika will find this news story useful.