www.garudabazaar.com

"உனக்கு திராணி இருந்தா சொல்லு பாப்போம், உன்னை மாதிரி ஒன்னும்".. திடீர்ன்னு ஆவேசமான அசிம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இதன் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்திருந்தது.

 

Azeem about criticism on his game in bigg boss house

Images are subject to © copyright to their respective owners

மொத்தம் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். மொத்தமுள்ள 21 போட்டியாளர்களில் இருந்து இந்த மூன்று பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த சூழலில், ஆறாவது பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பிக் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு இன்டர்வியூகள் கொடுத்து வருவதும், பல இடங்களில் செல்லும் போது மக்கள் அவருக்கு கொடுக்கும் அமோக வரவேற்பும் ஆகும்.

அப்படி இருக்கையில், Behindwoods -ன் "மக்களுடன் அசிம்" என்ற பிரத்யேக நிகழ்ச்சியில் அசிம் கலந்து கொண்டார். அதில் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களையும் தன் மீதான விமர்சனங்களுக்கான விளக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்.

Azeem about criticism on his game in bigg boss house

அப்போது பிக் பாஸ் டைட்டில் வின்னராக கோப்பையுடன் அசிம் இருக்கும் புகைப்படம் தொடர்பான மீம் ஒன்று காண்பிக்கப்பட்டது. அந்த தருணம் குறித்தும் பின்னர் கேள்வி எழுப்பப்பட்ட சூழலில், இதற்கு பதிலளித்த அசிம், "இந்த கப்ப நான் வாங்குவேன்னு எனக்கு தெரியும். நான் இருக்கும் போது என் நண்பன் மணிகண்டன், உடன் பிறவா சகோதரி தனலட்சுமி, ஆயிஷா, என் தம்பி அசல் கோலார் இவங்க எல்லாரையும் பார்க்கும் போது ஒரு Enthu -வோட இருந்தாங்க.

அதே கூட்டத்தில் கைய பின்னாடி கட்டிட்டு இருந்தவங்களையும் நான் பார்த்தேன். ஏன்னா நம்ம உள்ள இருக்கும் போது பயந்து பேசுற ஆளில்ல. வெளியே இருக்கும் போது கேட்கவா வேணும்.

உள்ள எப்பவுமே அசிம் கோவப்படுறான், கோவப்படுறான்னு. உனக்கு திராணி இருந்துச்சுன்னா நான் வேற என்ன பண்ணேன்னு நீ சொல்லு பார்ப்போம். ஏன்னா ஒண்ணுமே இல்ல சொல்றதுக்கு. உனக்கு என்கிட்ட Fault இருந்துதுன்னா கோபத்தை மட்டும் தான் சொல்ல முடியும். உன்ன மாதிரி பின்னாடி போய் புறம் பேசுறதில்ல. எல்லாருமே கேம் முடிஞ்சதுக்கு அப்புறம் நைட் Couchல உட்கார்ந்து பேசிட்டு இருப்பாங்க. நான் போய் படுத்துடுவேன் ஏன் தெரியுமா, எனக்கு தெரியும் வெளியே இத்தனை பேர் எனக்காக இருக்காங்க அப்படின்னு.

Azeem about criticism on his game in bigg boss house

Image Credit : Mohamed Azeem Instagram

அதனால் அந்த கப் அடிப்பேங்குற டவுட்டு சத்தியமா, இறைவன் மேல ஆணையா எனக்கு ஒரு சதவீதம் கூட இருந்ததே இல்லை. எனக்கு தெரியும் நான் கப் அடிப்பேன்னு. ஏன்னா வீட்டுக்குள்ள நான் நானா தான் இருந்தேன். நான் முகமூடி போட்டு எல்லாம் உள்ள போகல. ஆனா, உள்ள இருக்கிற பல முகமூடிய கிழிச்சிருக்கேன். ஒரு சிலர் சொன்னாங்க மக்கள் புத்திசாலி ஆனவங்கன்னு. டேய், மக்கள் புத்திசாலியானதுனால தான்டா என்னை ஜெயிக்க வெச்சாங்க" என தெரிவித்தார்.

"உனக்கு திராணி இருந்தா சொல்லு பாப்போம், உன்னை மாதிரி ஒன்னும்".. திடீர்ன்னு ஆவேசமான அசிம்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Azeem about criticism on his game in bigg boss house

People looking for online information on Azeem, Bigg Boss 6 will find this news story useful.