www.garudabazaar.com

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு அனிதா வெளியிட்ட முதல் பதிவு... " யாருக்கும் சொம்பு தூக்காம"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம்அனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். சமீபத்தில் அவர் ஆரியிடம் கோபமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் போட்டி என்று வந்துவிட்டால் அனிதா புலியாக மாறிவிடுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். கடுமையான போட்டியாளராக இருந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறியது அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

anitha first post after biggboss eviction அனிதா வெளியிட்ட முதல் பதிவு

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா முதல் முறையாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "இதற்கு மேல் என்ன வேண்டும். யாருக்கும் சொம்பு தூக்காம உண்மையா இருந்திட்டு வந்து இருக்கேன். நான் பைனல் வரைக்கும் இருந்தேன்னு சொல்லிக்கிற பெருமையை விட, இருந்தவரைக்கும் விளையாட்டை Twist  பண்ணதுல எனக்கும் பங்கு இருக்குனு சொல்லிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு கடைசிவரை ஓட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி. அழுகையும் கோபமும் எல்லாருக்கும் வரும் நீங்க பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போனால்தான் அது புரியும். ஒரு சென்சிடிவ் மனிதர் அதை கையாலறது எவ்வளவு கஷ்டம்னு. எனக்கு வோட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

உங்க எல்லாருடைய கமெண்ட்ஸ் மற்றும் பதிவுகளை பார்த்தேன் எனக்கு மிகவும் சந்தோஷமா, நிறைய தன்னம்பிக்கையை சம்பாதித்துள்ளதாக நினைக்கிறேன். நான் இப்படித்தான் உள்ளேயும் வெளியேயும். ஒரு போட்டியாளருக்காக மற்ற போட்டியாளர்களை காயப்படுத்தும் ரசிகர் பேஜ்கள் சில வெளியேறும் போட்டியாளர்களின் குடும்பத்தினரை தாங்க முடியாத மோசமான வார்த்தையினால் அவமான படுத்துகின்றனர். உங்களுக்கு காட்டுவது வெறும் ஒரு மணி நேரம், நாங்க பாக்குறது 24 மணி நேரம். யாருமே இங்க பர்ஃபெக்ட் கிடையாது. எல்லாருமே எல்லா நேரமும் சரியானவர்களாகவும் இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு அனிதா வெளியிட்ட முதல் பதிவு... " யாருக்கும் சொம்பு தூக்காம" வீடியோ

anitha first post after biggboss eviction அனிதா வெளியிட்ட முதல் பதிவு

People looking for online information on Anitha, Biggboss4tamil will find this news story useful.