திருநங்கைகளுக்கு அக்‌ஷய் குமார் செய்த உதவி - நெகிழ்ந்து போன லாரன்ஸ்.. ''அவர் கடவுள் மாதிரி''.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் லாரன்ஸின் ட்ரஸ்ட்டுக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாரன்ஸுக்கு அக்‌ஷய் குமார் உதவி | akshay kumar's help for raghava lawrence for the cause of transgender in kanchana remake time

லாரன்ஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் காஞ்சனா. இத்திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து இப்படத்தை தற்போது ஹிந்தியில் அவர் இயக்கி வருகிறார். அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் லாரன்ஸின் ட்ரஸ்ட்டுக்கு அக்‌ஷய் குமார் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பதிவிட்ட லாரன்ஸ் 'எங்கள் ட்ரஸ்ட்டின் 15-வது வருட நிறைவை கொண்டாட, திருநங்கைகளுக்காக வீடு கட்ட திட்டமிட்டோம், இதுகுறித்து லக்ஸ்மி பாம் ஷூட்டிங்கில் இருந்த போது அக்‌ஷய் குமாரிடன் சொன்னேன், உடனே அவர் 1.5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து உதவி செய்தார். உதவி செய்பவர்கள் அனைவரையுமே நான் கடவுளாக நினைப்பேன். இப்போது எங்களுக்கு அக்‌ஷய் குமார் கடவுளாகியிருக்கிறார்' என்று பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor