4 ரூபாய்க்கு தரமான உணவு... தினமும் 5 ஆயிரம் பேருக்கு வழங்கும் நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் 4 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் உணவகத்தை நடிகை ரோஜா கடந்த ஆண்டு திறந்து வைத்தார். ஆந்திர மாநிலம் நகரி சட்டசபைத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் நடிகை ரோஜா ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாகவும் இருக்கிறார். கடந்த ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு நகரி சட்டமன்ற தொகுதியில் 4 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Actress roja donates Food for people| ஏழைகளுககு உணவு வழங்கிய நடிகை ரோஜா

தற்போது கொரோனாவால் சாப்பாடு கிடைக்காமல் அனைவரும் கஷ்டப்படும் இந்நேரத்தில் புத்தூர் நகர சபைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவை “ரோஜா சாரிடபுள் டிரஸ்ட்” மூலம் தினமும் 5 ஆயிரம் பேருக்கு வழங்கி வருகின்றார்.

Entertainment sub editor

Tags : Corona