''எங்க கிட்ட கடைசியா இப்படி சொன்னார்'' - சுஷாந்த் சிங் குறித்து அவரது பணியாளர் சொன்ன தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்க, திரைப்படங்கள் வழி மக்களை மகிழ்வித்த கலைஞர்களின் மரண செய்திகள் அவர்களை மேலும் துயருரச் செய்து வருகிறது.

கடந்த வாரம் பிரபல கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்த செய்தியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்கு முன்னரே, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் அவர்களை கவலையடையச் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படத்தில் எம்.எஸ்.தோனியாக நடித்து நாடு முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார். அவரின் மறைவிற்கு பல்வேறு மொழி பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெரும்பாலானோர் சுஷாந்த் இளம் வயதில் மரணமடைந்ததை ஏற்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனர். அவரது மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் அவரது பணியாளர் ஒருவர் சுஷாந்தின் மரணம் குறித்து மீடியா ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், கடந்த 10 நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். மேலும் கடந்த 3 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தாராம். யாருடனும் சரியாக பேசவில்லை. எங்களின் சம்பளத்தை கூட அவரால் கொடுக்கமுடியுமா என்பதை சொல்ல முடியாது என்று எங்களிடம் கூறினார்'' இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் மரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sushant Singh Rajput's Servant reveals details about his last days | சுஷாந்த் சிங்கின் கடைசி நாட்கள் குறித்து அவரது பணியாளர் சொன்ன த�

People looking for online information on Dead, Sushant Singh Rajput will find this news story useful.