நடிகர் சுஷாந்த் சிங் மரணம்... உடற்கூறு அறிக்கை வெளியானது... மரணத்துக்கான காரணம் இதுதான்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மன அழுத்தம்தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், இது தற்கொலை அல்ல கொலை என்று அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங் உடற்கூறு அறிக்கை வெளியானது actor sushant singh post mortem report released

இந்நிலையில் அவரது உடற்கூறு(Post-mortem) அறிக்கை பல உண்மைகளை வெளிப்படுத்த கூடும் என்று அனைவரும் காத்திருந்தனர். தற்போது அந்த முக்கிய அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் அவரது மரணத்திற்கு காரணம் asphyxia அதாவது தூக்கிடுவதால் உடலுக்கு செல்லக்கூடிய ஆக்சிஜன் துண்டிக்கப்படுவதால் ஏற்படும் மரணம் என்ற முடிவு வெளியாகியுள்ளது. மேலும் அவரது வீட்டில் மரணத்துக்கு  முன்பு கடிதமோ அல்லது குறிப்போ கண்டெடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மன அழுத்தம் எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சுஷாந்த் சிங் உடற்கூறு அறிக்கை வெளியானது actor sushant singh post mortem report released

People looking for online information on Post mortem, Sushant Singh will find this news story useful.