எங்களுடன்தான் வாழ்ந்து வருகிறீர்கள்: சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு பிரபல ஓவியர் அஞ்சலி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மும்பை வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் வரையில் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Manas Kumar Sahoo Tribute to sushant singh rajpoot

அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் தங்கள் மனமார்ந்த வருத்தத்தையும் அஞ்சலிகளையும் சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். மும்பையைச் சேர்ந்த பிரபல மணல் ஓவியர் மானஸ் குமார் சாகோ சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு தனது facebook பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் சுஷாந்த் சிங்கின் உருவத்தை மணல் ஓவியமாக வரைந்துள்ளார். சுஷாந்த் நடித்த சிச்சோர் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் ஓவியத்தை வரைந்த அவர், 'பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு என்னுடைய மரியாதை இது, இந்திய திரை உலகுக்கு இது மிகப் பெரிய இழப்பு. நீங்கள் எப்போதும் எங்களுடன் தான் வாழ்ந்து வருகிறீர்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்’என்று பதிவிட்டுள்ளார். இந்த ஓவியத்துடன் பூக்கள் மற்றும் மெழுகித் திரியையும் வரைந்து அவருக்கு மரியாதை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. லாக்டவுன் காலகட்டத்தில் அதிகம் பேர் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலையில், அனுமதிக்கப்பட்ட கூட்டத்துடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Manas Kumar Sahoo Tribute to sushant singh rajpoot

People looking for online information on RIP, Sushant Singh Rajput will find this news story useful.