பிரபல நடிகைக்கு மன அழுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு... அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்போது மிகுந்த அதிர்வலையை உருவாக்கி உள்ளது. மன அழுத்தம்தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், இது தற்கொலை அல்ல என்று அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் மன அழுத்தம் பற்றிய பேச்சு அதிகரித்து வருகிறது. நண்பர்களுடன் அடிக்கடி உரையாடுங்கள் அவர்களது துக்கங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்பது போன்ற என்பது போன்ற கருத்துகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.

பிரபல நடிகை மன அழுத்தத்தால் அவதி Popular actress payal ghosh shares her sufferings from depression

இந்நிலையில் பிரபல நடிகை பாயல் கோஷ் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் "கடந்த 2015-ம் ஆண்டிலிருந்தே நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளேன். அதற்காக மருந்துகள் எடுத்து வருகிறேன். அப்படி வரும்போதெல்லாம் நான் மருத்துவமனைக்கு சென்றுவிடுவேன். அதிர்ஷ்டவசமாக எனது குடும்பமும் நண்பர்களும், எனது இந்த முட்டாள்தனமான பயங்களை குறை சொல்வதில்லை" என்று உருக்கமாக கூறியுள்ளார். இந்த பதிவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனஅழுத்தம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

பிரபல நடிகை மன அழுத்தத்தால் அவதி Popular actress payal ghosh shares her sufferings from depression

People looking for online information on Depression, Payal Ghosh, Sushant Singh will find this news story useful.