Breaking: ஆர்யாவின் பிளான் - Beast Look-க்கு பிறகு... இப்போ சுந்தர்.சியின் 'அரண்மனை 3'க்காக...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆக்‌ஷன்' படத்துக்கு பிறகு இயக்குநர் சுந்தர்.சி தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

ஆர்யா, சுந்தர்.சியின் அரண்மனை 3 படப்பிடிப்பில் இன்றுமுதல் கலந்து கொள்கிறார் | Arya Joining Sundar C, Yogi Babu, Raashi K

இந்த படத்தில் ஆர்யா, சுந்தர்.சி முதன்மை வேடத்தில் நடிக்க, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி என மூன்று ஹீரோயின்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கான படப்பிடிப்பு குஜராத் அருகில் உள்ள ராஜ்கோட்டில் 25 நாட்கள் நடைபெறவிருக்கிறதாம்.

இந்த படத்தில் யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர் ஆர்யா இன்று  முதல் (பிப்ரவரி 24) ராஜ்கோட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறாராம்.

Entertainment sub editor