வாணி ராணி சீரியலில் மீ டூ பிளாக்மெயில் காட்சியா?- சின்மயியின் கேள்விக்கு ராதிகா பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாணி ராணி சீரியலில் ‘மீ டூ’ இயக்கம் பற்றி இடம்பெற்ற காட்சி குறித்து கேள்வி எழுப்பிய பாடகி சின்மயிக்கு நடிகை ராதிகா சரத்குமார் பதிலளித்துள்ளார்.

Chinmayi questions Radikaa's 'Vani Rani' episode regarding Me Too movement

திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவது குறித்து காரசாரமாக பேசப்பட்ட மீ டூ இயக்கம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழ் திரை பிரபலங்கள் பலரது பெயரும் சிக்கியது.

இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமாரின் மிகவும் புகழ்பெற்ற சீரியலான ‘வாணி ராணி’ சீரியலில் ‘மீ டூ’ இயக்கத்தை தவறாக சித்தரித்திருப்பதாக பாடகி சின்மயி நடிகை ராதிகாவிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக அவரது ட்வீட்டில், ‘திரைத்துறையில் வெற்றிபெற நீங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள். ஒரு பெண்ணாக, அதிகாரம் படைத்த ஆண்கள் எப்படி பெண்களைக் கொடுமைப்படுத்தி பாடாய்படுத்துவார்கள் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆனால், ஏன் ‘வாணி ராணி’ தொடரில் ‘மீ டூ’ இயக்கத்தை பிளாக்மெயில் செய்வதற்காக பயன்படுத்தினீர்கள்?’என்று கேள்வி எழுப்பிய சின்மயி, குறிப்பிட்ட அந்த எபிசோடின் யூடியூப் லிங்கையும் பகிர்ந்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ராதிகா, ‘நீண்ட நாட்களாக திரைத்துறையில் இருக்கிறேன். அனைவரின் உரிமைக்காகவும் குரல் கொடுத்திருக்கிறேன். அதிலும் பெண்ணுரிமைக்கு தவறாமல் முன் நிற்பேன். இது திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். நீங்கள் சொன்ன தொடரின் கதையில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், என்னை அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.