BREAKING: "இலங்கையில் அவசரநிலை பிரகடனம்.. மக்கள் வெளியே வரக்கூடாது".. அதிபர் பொறுப்பை கையில் எடுத்த பிரதமர் ரணில்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 13, 2022 01:50 PM

இலங்கை முழுவதும் அவசரநிலையை அறிவித்திருக்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. மேலும், சில மாகாணங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிப்பு.

Sri Lanka PM declares a state of emergency and impose curfew

Also Read | ஆந்திரா - சென்னை இடையே நடக்கும் போதை சப்ளை... காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவல்.. வீட்டை சுற்றி வளைத்த போது வெளிவந்த உண்மை..!

22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை, கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இலங்கை முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் கையில் கேன்களுடன் வரிசையில் நின்று வருகின்றனர். இது போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.

போராட்டம்

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தடையை மீறி நுழைந்தனர். மேலும், மாளிகையில் இருக்கும் அறைகள் மற்றும் நீச்சல் குளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

Sri Lanka PM declares a state of emergency and impose curfew

இதனை தொடர்ந்து அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்தனர். இன்று அதிகாரப்பூர்வமாக கோத்தபய பதவி விலக இருந்தார்.

அவசரநிலை

இந்நிலையில், அதிபர் தனது குடும்பத்தினருடன் ராணுவ ஜெட்டில் மாலத்தீவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டை விட்டு வெளியேற தனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கோத்தபய கோரிக்கை வைத்ததாகவும் அதன் பின்னரே விமானப்படையின் ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பொறுப்பு அதிபராக செயல்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. மேலும், நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்வதாகவும், மேற்கு பிராந்தியங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறார் ரணில். ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Sri Lanka PM declares a state of emergency and impose curfew

இதனையடுத்து, அப்பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "4 நாள் போதும் நாங்க கேஸ்-ல ஜெய்ச்சிடுவோம்".. எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்த ட்விட்டர்..மஸ்க் போட்ட ரிப்ளை..!

Tags : #SRI LANKA #SRI LANKA ECONOMIC CRISIS #SRI LANKA PM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sri Lanka PM declares a state of emergency and impose curfew | World News.