செம 'ஷாக்' : சின்னஞ்சிறுசுமா '8 புள்ளைங்க'... 'கற்களை' போட்டு சமைத்த 'தாய்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | May 02, 2020 05:53 PM

கென்யா நாட்டில் தனது எட்டு குழந்தைகளின் பசியை போக்க முடியாத ஏழைத்தாய் ஒருவர் கற்களை போட்டு சமையல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mother pretends to boil stones for her children in Kenya

கென்யா நாட்டின் மொம்பாசா நகரில் வசித்து வருபவர் பெனின்னா பஹாட்டி கிட்டாசோ. சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட, தனது எட்டு குழந்தைகளை துணி சலவை செய்யும் தொழில் செய்து காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக வருமானம் இல்லாததால் ஒரு வேளை உணவு மட்டும் தனது எட்டு குழந்தைகளுக்கு அளித்து வந்துள்ளார் பெனின்னா.

ஒரு கட்டத்திற்கு மேல் உணவு பொருட்களும் தீர்ந்து போய்விட, குழந்தைகள் பசியை தாங்க முடியாமல் அழுது புலம்பியுள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த பெனின்னா, சமையலறைக்கு சென்று தண்ணீரை காய்ச்சி கற்களை அதில் போட்டு சமைப்பது போல் நடித்துள்ளார். தாய் சமைத்து கொண்டு வருவார் என காத்திருக்கும் குழந்தைகள், பசியின் மயக்கத்தில் சிறிது நேரத்தில் தூங்கி விடுவார்கள்.

பெனின்னாவின் இந்த சோக நாடகத்தை அறிந்த பக்கத்து வீட்டுக்கார பெண்மணி ஒருவர், இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உதவியை கேட்டுள்ளார். பட்டினியின் பிடியில் சிக்கி தவிக்கும் பெனின்னாவின் நிலையை அறிந்து கலங்கி போன பலர், உலகின் பல பகுதிகளில் இருந்து தங்களால் இயன்ற உதவியை அளித்துள்ளனர். பட்டினியால் பிள்ளைகளை ஏமாற்ற வேண்டி கல்லை போட்டு சமைத்த தாயின் வறுமை நிலை மனதை உருக வைக்கும் நிலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.