‘இதுவரை இல்லாத உச்சகட்ட பலி!’.. ‘இன்று ஒரே நாளில் இத்தாலியில் கொத்துக் கொத்தாக உயிர்ப்பறித்த ‘ஆட்கொல்லி கொரோனா!’

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 27, 2020 11:55 PM

இத்தாலியில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 919 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Italy records 919 deads for COVID19 highest in a day

இதுவரை 86 ஆயிரத்து 500 பேர் இத்தாலியில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 602 பேர் கடந்த திங்கள் கிழமை கொரோனா என்னும் கொடிய ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ள சம்பவம் உலகையே அதிர வைத்தது.

ஆனால் இந்த சுவடு மறைவதற்குள் 743 பேர் செவ்வாய்க்கிழமை அன்றும், 683 பேர் புதன்கிழமை அன்றும், 712 பேர் வியாழக்கிழமை அன்றும் என கொத்துக்கொத்தாக இதுவரை கொரோனாவுக்கு இத்தாலி நாட்டில் 9 ஆயிரத்து 134 பேர் பலியாகியுள்ளனர். இதில் இத்தாலியில் இதுவரை கொரோனாவுக்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 919 பேர்  பலியாகியுள்ளது இன்றுதான் (மார்ச் 27) என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ITALYSTAYSTRONG #CORONAVIRUSOUTBREAKINDIA #CORONAUPDATE