darbar USA others

'மதுபோதையில்' தகராறு செய்த தந்தை... மகன் செய்த 'வெறிச்செயல்'... 'குடியால்' அழிந்த குடும்பம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 12, 2020 03:06 PM

மதுபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையின் செயலை சகிக்க முடியாத மகன், சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The son who killed his father, who was arguing with his mother

மேட்டுப்பாளையத்தில் உள்ள சிராஜ் நகர்பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு சாமி. இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு அமுதவள்ளி என்ற மனைவியும் சச்சின்குமார் என்ற மகனும் உள்ளனர். கருப்பசாமிக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததால் மனைவி அமுதவள்ளியும், மகன் சச்சின்குமாரும் கடந்த 6 வருடங்களாக  தனியே வாழ்ந்து வருகின்றனர்.

மகன் சச்சின் குமார் காரமடையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கருப்புசாமி தன் மனைவிக்கு போன் செய்து பேச வேண்டும் என வீட்டிற்கு வரச் சொல்லி உள்ளார். இதயடுத்து அமுதவள்ளி மற்றும் சச்சின்குமார் ஆகிய இருவரும் கருப்புசாமியின் வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த கருப்புசாமி இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தந்தைக்கும், மகனுக்கு கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரத்தில் கருப்புசாமி அரிவாளை எடுத்து மகனை வெட்டமுயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவரது கையில் இருந்த அரிவாளை பிடுங்கிய மகன், தந்தையை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார், சடலத்தைக் கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையைக் கொன்ற மகன் சச்சின் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #DRUNKEN FATHER #DISPUTE MOTHER #SONG ANGER #METTUPALAYAM #POLICE ARREST