சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி... 'சிறைக்கு' சென்ற எஸ்.ஐ-க்கு கொரோனா... இன்ஸ்பெக்டருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jul 25, 2020 12:02 AM

இந்தியா முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Sathankulam: Coronavirus Confirmed for SSI Pauldurai

அதோடு அவருடன் தொடர்பில் இருந்த காவலர்கள் மற்றும் அவரை அழைத்து சென்றவர்கள் ஆகியோரை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளனர். முன்னதாக வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

இதற்கிடையில் நேற்று சிறையில் இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sathankulam: Coronavirus Confirmed for SSI Pauldurai | Tamil Nadu News.