சூடுபிடிக்கும் ஆடுகளம்.. 'சட்டமன்ற தேர்தலில்' இன்னும் டஃப் கொடுக்குமா 'சசிகலா விடுதலை?'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 15, 2020 07:05 PM

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல்  சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்

Sasikala Release May Create Tough in 2021 TN Assembly election

அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் சசிகலா விடுதலை ஆகும் தேதியை அறிய, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் மனு அனுப்பியிருந்தார். அதற்கு கர்நாடக சிறை நிர்வாகம் சசிகலா வரும் 2021 ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என்று பதில் அறிவித்துள்ளது. அத்துடன் அபராத தொகையான ரூபாய் 10 கோடியை கட்ட தவறினால் அவரது விடுதலையாகும் நாள் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, அதாவது மேலும் 1 வருட காலம் அவர் சிறையில் இருக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ரூபாய் 10 கோடி அபராத தொகையை உடனடியாக கட்டி தேர்தலுக்கு முன்னரே சசிகலாவை சிறையில் இருந்து வெளியில் எடுக்க அவரது ஆதரவாளர்கள்  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி, திமுக கட்சி, மட்டும் அல்லாமல் சசிகலா மற்றும் பல பல புதிய கட்சிகள் களமிறங்கி, வாக்காளர்களுக்கு டஃப் கொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sasikala Release May Create Tough in 2021 TN Assembly election | Tamil Nadu News.