'செஞ்சி' தொகுதி திமுக எம்.எல்ஏவுக்கு... கொரோனா தொற்று உறுதி...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Jun 28, 2020 02:03 PM

தமிழகத்தில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Fourth DMK MLA Tests positive for Corona Virus

இதுவரை தமிழகத்தில் மட்டும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரான மஸ்தான் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், ரிஷிவந்தியம் தொகுதி எம் எல் ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி. அரசு ஆகிய 3 திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில் தற்போது நான்காவது திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fourth DMK MLA Tests positive for Corona Virus | Tamil Nadu News.