“அப்ளை பண்ற எல்லாருக்கும் இ-பாஸ்!!”.. ‘மாவட்ட எல்லைகளை’ கடக்க ‘இ-பாஸ்’ அவசியமா? - போலீஸ் சொல்வது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 16, 2020 10:44 AM

மாவட்ட எல்லைகளை கடந்து செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைக்காக தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதுடன் திருமணம், மருத்துவம், இறப்பு அல்லது வெளியூரில் சிக்கி தவிப்பவர்கள் உள்ளிட்ட நான்கு காரணங்களுக்காக மட்டுமே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இ-பாஸ் வழங்கப்படுகிறது.

EPass mandatory still? This is what TN police says

இதனிடையே இ-பாஸ் அமைப்பில் நிறைய சிக்கல்களை உணர்வதாகக் கூறப்பட்டதுடன் பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில் நாளை முதல் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லைகளை கடந்து செல்வதற்கு பலர் முற்பட்டனர். ஆனால் மாவட்ட எல்லைகளில் சோதனை நடத்தும் போலீசார் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தியதோடு திருப்பி அனுப்பியும் வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்த போலீசார், “விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று கூறவில்லை. ஆகவே சாலை மார்க்கமாக வாகனங்களில் மாவட்ட எல்லைகள் கடந்து செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாமல் போலீசாருடன் வாக்குவாதம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. EPass mandatory still? This is what TN police says | Tamil Nadu News.