105 பேருக்குமே 'நெகட்டிவ்'... அப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு... 'நம்பிக்கை' தரும் மாவட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jun 14, 2020 03:07 PM

பரிசோதனையில் 105 பேருக்கும் கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Corona Test results Negative for 105 people in Nilgiris

தமிழகம் முழுக்க கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் கொரோனாவில் இருந்து மீண்ட நீலகிரி மாவட்டத்தில் சென்னையில் இருந்து கோத்தகிரி சோலூர் மட்டம் பகுதிக்கு வந்த கர்ப்பிணி மற்றும் மஞ்சூர் பிக்கட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் என இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இருவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து அவர்கள் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உட்பட சுமார் 105 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர்கள் அனைவருக்கும் கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Corona Test results Negative for 105 people in Nilgiris | Tamil Nadu News.