'வாயில துணிய வச்சு அமுக்கினோம்...' 'எங்கள பார்த்து கொஞ்சம்கூட பயம் இல்ல, அதான்...' விழுப்புரம் சிறுமி கொலையாளிகளின்... அதிர வைக்கும் வாக்குமூலம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 12, 2020 03:01 PM

தமிழகத்தையே அதிர வைத்த தீ வைத்து எரிக்கப்பட்ட விழுப்புரம் சிறுமியின் கொலைக்கு கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த வாக்குமூலம் தமிழக மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Confession of killers of Villupuram girl burnt to death

ஜெயபால் மற்றும் ராஜி தம்பதியினரின் மகள் தான் ஜெயஸ்ரீ. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியில் வசிக்கும் இவர்கள் விவசாயக் கூலி வேலையும், சொந்தமாக பெட்டிக்கடையும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மேலும்  இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர்.  தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று ஜெயஸ்ரீக்கு நடந்த சம்பவம் தமிழக மக்களையே குலைநடுங்க செய்தது. வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியான ஜெயஸ்ரீயை அப்பகுதியை சேர்ந்த இரு நபர்கள்  வாயில் துணி வைத்து, கைகளை கட்டி முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கபக்கத்தினர் உடனடியாக ஜெயஸ்ரீயை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்பொழுதும் தன்னை இப்படி செய்து முருகன் மற்றும் கலியபெருமாள் என்னும் இருவர் தான் என ஜெயஸ்ரீ மரண வாக்குமூலம் கொடுத்தார். அதையடுத்து கொடூர மனம் படைத்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் 90 சதவீத தீக்காயங்களுடன் இருந்த ஜெயஸ்ரீயை காப்பாற்ற முடியவில்லை.

தேசிய அளவில் எதிரொலித்த இந்த சம்பவத்தால் தேசிய குழந்தைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு வாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

அதிகார போதையில் இருந்த இந்த மனித மிருகங்களின் வாக்குமூலம் அனைவரையும் அதிர செய்துள்ளது.

வாக்குமூலத்தில், "எங்களுக்கும் ஜெயபால் குடும்பத்துக்கும் 7 வருஷமா பிரச்சனை போய்ட்டு இருக்கு. நாங்க ஒரு அரசியல் கட்சில இருக்கோம்ணு தெரிஞ்சும் கொஞ்சம் கூட பயம் இல்லாம எங்ககிட்ட எதிர்த்து பேசுவான். இப்ப முருகன் வீட்டு பக்கத்துல இருக்க நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணி காசு பாக்குறான். இவன் எங்களுக்கு பயப்படாம இவ்ளோ திமிரா இருக்குறதுக்கு காரணம் ரெண்டு பெட்டி கடை வச்சு சம்பாதிக்குறோம்ற திமிரு.

4 மாசம் முன்னாடி நடந்த ஒரு பிரச்சனைல ஜெயபாலையும், அவரு பொண்டாட்டி ராஜியையும் நான் அடிச்சேன். அப்பவும் எங்களுக்கு பயப்படாம போய் போலீஸ்ல புகார் கொடுப்பான்.

எங்களுக்குள்ள சண்ட வரும் போதெல்லாம் இந்த ஜெயஸ்ரீ பொண்ணு எங்கள திட்டும். அதனால அவமேல இன்னும் கோவம் அதிகமாச்சி. ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட அவங்க பெட்டிக் கடையில நடந்த சண்டைக்கு நாங்கதான் காரணம்னு, போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுக்கப் போனாங்க.

அப்போ இந்த ஜெயஸ்ரீ பொண்ணு தனியா கடைல இருந்துச்சு. இவங்களுக்கு பாடம் கத்துக்கொடுக்கணும்ணு கடையில இருந்த ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வைத்து அழுத்தி வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டுப் போனோம்.

அங்க இருந்த துணில திரும்ப அவ கை காலை கட்டி, எதிர்க்க இருந்த மண்ணெண்ணெய் ஊத்தி அவளை உயிரோட கொளுத்திட்டு வந்துட்டோம்" என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Tags : #VILUPURAM