முதல் கணவரை பாக்க ஆசைப்பட்ட மனைவி.. கிச்சனில் இருந்து வேகமாக வந்த 2வது கணவர்.. பதைபதைப்பு சம்பவம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 27, 2022 07:23 PM

முதல் கணவரை பார்க்க ஆசைப்பட்ட மனைவி மீது ஆத்திரத்தில் இரண்டாம் கணவர் செய்த செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai wife want to meet first husband second one bad decision

சென்னையை அடுத்த புழல் எம்.ஜி.ஆர் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 31). எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வரும் இவருக்கும், கலா (வயது 25) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இளங்கோவன் - கலா தம்பதியருக்கு இரண்டு மகன்களும் இருந்து வந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறின் பெயரில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்துள்ளனர்.

மலர்ந்த காதல்

இதன் பின்னர், சென்னை பாரிமுனையில் இளங்கோவன் வேலைக்கு சென்ற போது, வெண்ணிலா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். வெண்ணிலாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. அவரும் தனது கணவரை பிரிந்து, தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், இளங்கோவன் மற்றும் வெண்ணிலா ஆகியோர் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

அடிக்கடி தகராறு

பிறகு, இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு, கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, வெண்ணிலாவின் நடத்தையில், இளங்கோவனுக்கு சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

முதல் கணவர்

அத்தகைய சூழலில் தான், தன்னுடைய முதல் கணவர் மற்றும் குழந்தைகளை பார்க்க வேண்டும் என ஆசையாக உள்ளதாகவும், தான் சென்று பார்த்து வருகிறேன் என்றும், இளங்கோவனிடம் வெண்ணிலா கேட்டுள்ளார். ஆனால், இதற்கு இளங்கோவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் பெயரில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தில் இரண்டாம் கணவர்

அப்போது, இளங்கோவனின் தாத்தா தமிழ்தாசன் தான், அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளார். ஆனால், இருவரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த இளங்கோவன், சமையல் அறைக்கு சென்று, அங்கிருந்த கத்தியை எடுத்து, வெண்ணிலாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். அதனை செயலிலும் செய்து காட்டவே, அங்கு ரத்த வெள்ளத்தில் சரிந்த வெண்ணிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சரண் அடைந்த இளங்கோவன்

இதனையடுத்து, அருகேயிருந்த காவல் நிலையத்திற்கு சென்ற இளங்கோவன், நடந்தவற்றை கூறி, சரண் அடைந்துள்ளார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், இளங்கோவனை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கணவரை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டதன் பெயரில், மனைவியை இரண்டாம் கணவரை தீர்த்துக் கட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #WIFE #HUSBAND #ANGRY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai wife want to meet first husband second one bad decision | Tamil Nadu News.