'முன்னாள் அதிமுக அமைச்சருக்கு கொரோனா'... தனியார் மருத்துவமனையில் அனுமதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 06, 2020 11:32 AM

முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Chennai : AIADMK Ex Minister Valarmathi tests positive for COVID-19

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பா.வளர்மதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai : AIADMK Ex Minister Valarmathi tests positive for COVID-19 | Tamil Nadu News.