'சென்னையிலேயே அதிகபட்ச பாதிப்புள்ள மண்டலம்'... 'ஆனாலும் ஆறுதல் செய்தியுடன்'... 'வெளியாகியுள்ள தற்போதைய நிலவரம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 13, 2020 01:31 PM

சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10.2 சதவீதமாக குறைந்துள்ளதாக ஆறுதல் தரும் செய்தி வெளியாகியுள்ளது.

Chennai Active Corona Cases Dropped To 10.2% Most In Ambattur

சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 98,736 (88%) பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இதுவரை 2,370 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 10,953 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 1,160 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,475 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதைத்தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும், அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 1,303 மற்றும் 1,151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று (13.08.2020) மண்டல வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை

திருவொற்றியூர் - 293

மணலி - 102

மாதவரம் - 464

தண்டையார்பேட்டை - 592

ராயபுரம் - 769

திரு.வி.க நகர் - 677

அம்பத்தூர் - 1,475

அண்ணா நகர் - 1,151

தேனாம்பேட்டை - 701

கோடம்பாக்கம் - 1,303

வளசரவாக்கம் - 875

ஆலந்தூர் - 569

அடையாறு - 1,048

பெருங்குடி - 442

சோழிங்கநல்லூர் - 453

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 39

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai Active Corona Cases Dropped To 10.2% Most In Ambattur | Tamil Nadu News.