புதுச்சேரியில் சுற்றுலா.. ஹோட்டலில் ரூம் எடுத்த காதல் ஜோடி.. இரவில் மயங்கி விழுந்த காதலன்! நடந்த விபரீதம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pandidurai T | Feb 04, 2022 05:47 PM

புதுச்சேரி:  காதலியுடன் தங்கியிருந்த காதலன் மயங்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

boyfriend death whostayed with girl friend in puducherry

வேலூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ஊர்மிளா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள்  இருவம் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.  பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

திருமணம் தேதி நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற உள்ள நிலையில் கடந்த 29ஆம் தேதி இருவரும் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து நோனங்குப்பம் படகு குழாம் அருகே தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 9 மணிக்கு ரமேஷூக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் விடுதிக்கு திரும்பினார். 

boyfriend death whostayed with girl friend in puducherry

இந்த நிலையில் நேற்று காலை ரமேசுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி சரிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் விடுதி ஊழியர்கள் உதவியோடு ரமேசை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு மருத்துமனைக்கு கொண்டு வந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது வரும் வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அப்பெண் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #PUDUCHERRY #CRIME #LOVERS #DEATH #POLICE #RAMESH #TOUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Boyfriend death whostayed with girl friend in puducherry | Tamil Nadu News.