நாம பெரிய 'ஆபத்துல' இருக்கோம்...! 'தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்திய நிலையில்...' - 'டிவிட்டரில்' தனது 'கருத்தை' வெளியிட்ட சித்தார்த்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 08, 2021 01:54 PM

தமிழகத்தில் அமல்படுத்தபட்டுள்ள முழுஊரடங்கு குறித்து நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Actor Siddharth tweeted about the full curfew in Tamil Nadu.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளது.

அதோடு தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவும் வீதம் முன்பை விட அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இழந்து வருகிறோம். மருத்துவர்களுக்கு ஆதரவு வழங்குவோம். பாதுகாப்பாக இருப்பதும் மற்றவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. நம் ஒன்றாக இந்த பெரும் தொற்றை சமாளிக்க முடியும்' என பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor Siddharth tweeted about the full curfew in Tamil Nadu. | Tamil Nadu News.