darbar USA others

அவங்க ‘3 பேரும்’ விளையாடட்டும்... அத பார்க்க ‘ஆர்வமா’ இருக்கும்... விட்டுக் கொடுத்த ‘கோலி’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jan 13, 2020 05:18 PM

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான், கே.எல்.ராகுல் இருவரும் விளையாட வாய்ப்புள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Virat Kohli Could Bat At No 4 To Include Dhawan KL Rahul

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கி வந்தனர். இந்நிலையில் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கினார். அவருடைய அபாரமான ஆட்டம் மற்றும் ரோஹித் ஓய்வு காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 போட்டியின்போது மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது தவான், ராகுல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அடுத்த போட்டியில் ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள விராட் கோலி, “வீரர்கள் அனைவருமே ஃபார்மில் இருப்பது அணிக்கு எப்போதுமே சிறப்பானதுதான். அதில் அணிக்கு எப்படிபட்ட காம்பினேஷன் வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்த போட்டியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூன்று பேருமே விளையாட வாய்ப்புள்ளது. ஆடுகளத்தில் நாங்கள் எப்படிபட்ட பேலன்ஸ் அணியாக விளையாடுகிறோம் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும்.

அதனால் நான் 4-வது இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. நான் எந்த இடத்தில் களமிறங்கி விளையாடுகிறேன் என்பதை பற்றி யோசிப்பதில்லை. நான் 4வது இடத்தில் விளையாடுவதில் மகிழ்ச்சிதான். அணியின் கேப்டனான எனக்கு தற்போது விளையாடும் வீரர்களை மட்டும் பார்ப்பது வேலை இல்லை, எனக்கு பிறகும் சிறப்பான அணியை உருவாக்கி மற்றொருவர் கையில் கொடுக்க வேண்டும் என்பதும்தான்” எனக் கூறியுள்ளார்.

Tags : #CRICKET #VIRATKOHLI #ROHITSHRAMA #SHIKHARDHAWAN #KLRAHUL #TEAMINDIA #INDVSAUS