தோனி இன்னும் 'எத்தனை' வருஷம் ஐபிஎல்ல வெளையாடுவாரு?... ரகசியத்தை வெளிப்படுத்திய CEO

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Aug 12, 2020 03:34 PM

2020-ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதையடுத்து அனைத்து ஐபிஎல் அணிகளும் விரைவில் மூட்டை, முடிச்சுகளுடன் பயணம் மேற்கொள்ள இருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பின் தோனி விளையாட இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

MS Dhoni may lead Chennai Super Kings even in IPL 2022: CSK CEO

இந்த நிலையில் தோனி சென்னை அணிக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து சென்னை அணியின் சிஈஓ காசி விஸ்வநாதன், '' இந்த ஆண்டு (2020) சென்னை அணிக்காக தோனி விளையாடுவார். அடுத்த ஆண்டு (2021) அதற்கு அடுத்த ஆண்டும் (2022) தோனி சென்னை அணிக்காக விளையாடுவார். அவரே கேப்டனாக தொடர்வார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை,'' என தெரிவித்து இருக்கிறார்.

ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் சென்னை அணியின் கேப்டனாக தோனி இருந்து வருகிறார். 10 ஐபிஎல் தொடர்களை தோனி தலைமையில் சென்னை அணி சந்தித்து இருக்கிறது. இதில் 8 முறை சென்னை அணி இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. 3 முறை கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் தொடர்களில் அதிக வெற்றிகளை சந்தித்த கேப்டன் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MS Dhoni may lead Chennai Super Kings even in IPL 2022: CSK CEO | Sports News.