"ஒரு தவறான முடிவு... ஆட்டத்தையே தலைகீழா புரட்டிப்போட்ருச்சு!... MAN OF THE MATCH இவருக்குதான் குடுக்கணும்” - கோபத்தில் கொதித்த சேவாக்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Sep 21, 2020 11:03 AM

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தோல்விக்கு அம்பயரின் தவறும் காரணமெனத் தெரியவந்துள்ளது.

IPL2020 Sehwag Slams Umpires Short Run Call After KXIP Lose vs DC

நேற்று நடந்த பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணிக்கு 19வது ஓவரை காகிசோ ரபாடா வீச, ஒரு பந்தை பஞ்சாப் வீரர் ஜோர்டான் லாங் ஆன் திசையில் தட்டிவிட்டு 2 ரன்கள் எடுத்தார். அப்போது அவர் பேட்டை சரியாக கிரீசுக்குள் வைத்த போதும் அவர் வெளியே வைத்து விட்டதாக கருதி அம்பயர் நிதின் மேனன் ஒரு ரன்னை குறைத்துவிட்டார்.

IPL2020 Sehwag Slams Umpires Short Run Call After KXIP Lose vs DC

இந்த ரன் மட்டும் பஞ்சாப் அணியின் கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தால், அந்த அணி 20 ஓவருக்குள்ளேயே வெற்றி பெற்றிருக்கும். ஆட்டத்தின் முடிவே தலைகீழாக மாறியிருக்கும். இதையடுத்து தவறான முடிவைக் கொடுத்த அம்பயர் நிதின் மேனனை முன்னாள் வீரர் சேவாக் சாட்டியுள்ளார்.

IPL2020 Sehwag Slams Umpires Short Run Call After KXIP Lose vs DC

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மேன் ஆப் தி மேட்ச் தேர்வோடு நான் உடன்படவில்லை. இந்த 'ஷார்ட் ரன்' (Short Run) முடிவை வழங்கிய நடுவரே ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இதுபற்றிப் பேசியுள்ள மற்ற வீரர்களும் இதுபோன்ற நேரங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டுமெனக் கூறியுள்ளனர்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2020 Sehwag Slams Umpires Short Run Call After KXIP Lose vs DC | Sports News.