“அதாகப்பட்டது ரசிகர்களே.. உங்களுக்கு சொல்றது என்னன்னா..!”.. CSK ‘வெற்றிக்கு’ பின் தோனியின் ‘வைரல்’ பேச்சு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Nov 01, 2020 10:26 PM

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனில் சென்னை அணி பஞ்சாப் அணியை எதிர்த்து இன்று விளையாடி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்தது.

IPL2020: message to fans says MS Dhoni after winning in CSKvsKXIP

இந்தப் போட்டி  முடிந்த பின்பேசிய தோனி, “இந்த கடினமான ஆட்டத்தில் நாங்கள் முழு ஆற்றலையும் செலவிட்டு விளையாடியதாக நினைக்கவில்லை. 6-7 போட்டிகள் மிக கடினமாக  இருந்தன. அடுத்த 10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு அணியில் மாற்றம் செய்ய வேண்டும். ஐபிஎல் போட்டித் தொடரின் தொடக்கத்தில் நாங்கள் உருவாக்கிய அணி நன்றாக செயல்பட்டது. இப்போது அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணியை ஒப்படைக்க வேண்டிய நேரம்.

ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார். அவருக்கு கொரோனா ஏற்பட்டதால்  குணமாகியும் உடல்திறன் முழுமையாக சரியாகவில்லை.  போதிய பயிற்சி செய்ய வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவில்லை.  எனவே வாட்சன் மற்றும் டு பிளஸிஸுடன் நாங்கள் ஆடினோம். ஆனால் அது சரியாக அமையாமல் போனது. ரசிகர்களுக்கு நாங்கள் சொல்வது என்ன செய்தி என்றால், நாங்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவோம். பல வீரர்கள் என்னிடம், நான் இந்த தொடரோடு ஓய்வு பெற்று விடுவேன் எனக்கருதி எனது ஜெர்சியை வாங்கியிருக்கலாம்” என்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2020: message to fans says MS Dhoni after winning in CSKvsKXIP | Sports News.