பவுலர்களை 'டயர்டாக்கிய' கூட்டணி... 'தளபதி' ஸ்டைலில்... வாழ்த்திய 'சென்னை' அணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 18, 2019 11:53 PM
இன்றைய வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணி இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித், ராகுல் சதமடிக்க, ஷ்ரேயாஸ் அரைசதமும் பண்ட் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக 4 ஓவர்களில் பண்ட்-ஷ்ரேயாஸ் கூட்டணி 73 ரன்கள் எடுத்து அசத்தியது.

இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்கிறது. அதில், '' முதல் இன்னிங்ஸ் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றதா? இல்லை வெறித்தனத்தில் நடைபெற்றதா என்று உறுதியாக தெரியவில்லை?,'' என தெரிவித்துள்ளது.
Not sure whether the first innings happened at Vishakapatnam or Verithanam! #WhistlePodu #INDvWI 🦁💛 pic.twitter.com/nWOqz2MF81
— Chennai Super Kings (@ChennaiIPL) December 18, 2019
சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடல் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்தது குறிப்பிடத்தக்கது.
