இந்தியாவின் முதல் ‘பெண்’ கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்.. கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 05, 2021 12:34 PM

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திர நாயுடு உடல்நலக்குறைவால் காலமானார்.

India\'s first female cricket commentator passed away

இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே நாயுடுவின் மகள் சந்திர நாயுடு. இவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசுக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும் தனது தந்தை சி.கே. நாயுடு குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். கல்லூரியில் படிக்கும்போதே சந்திர நாயுடு கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வமாக விளையாடியுள்ளார்.

India's first female cricket commentator passed away

கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டிய சந்திர நாயுடு, இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆனார். இவரது பெயரில் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

India's first female cricket commentator passed away

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சந்திர நாயுடு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று தனது 88-வது வயதில் சந்திர நாயுடு காலமானார். இவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. India's first female cricket commentator passed away | Sports News.