"எப்போ சாகப்போறனு கேக்குற மாதிரி".. தோனியின் ஓய்வு குறித்து மனம் திறந்த முரளி விஜய்! EXCLUSIVE

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pichaimuthu M | Mar 24, 2023 01:10 AM

கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வு குறித்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் முரளி விஜய் பதில் அளித்துள்ளார்

Former Cricketer Murali Vijay about CSK MS Dhoni Retirement

உலகக் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடரின் அட்டவணை சில தினங்களுக்கு முன்னர்  வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணைப்படி, மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி, மே 28 ஆம் தேதியன்று முடிவடைகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள சூழலில், ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 7 போட்டிகளை தங்களின் ஹோம் கிரவுண்டிலும், மீதமுள்ள 7 போட்டிகளை மற்ற மைதானங்களில் ஆடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தரம்சாலா ஆகிய 12 நகரங்களில் உள்ள மைதானங்களில் ஐபிஎல் 2023 போட்டிகள் நடைபெறுகின்றன.  52 நாட்களில் 12 மைதானங்களில் மொத்தம் 70 லீக்  ஆட்டங்கள் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னை உட்பட பெருநகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தோனி இதுவரையில் 234 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 4978 ரன்களை அவர் குவித்திருக்கிறார். இதில் 24 அரை சதங்களும் அடங்கும்.

மேட்ச் பரபரப்பான சூழ்நிலையில் இருக்கும்போதும், பொறுமையுடன் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதில் தோனி ஒரு வித்தைக்காரர். இதன் காரணமாகவே ரசிகர்கள் தோனியை கூல் கேப்டன் என்றும் மிஸ்டர் கூல் என்றும் அழைக்கின்றனர்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அளித்துள்ளார். அதில், தோனியின் ஓய்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, "தோனி பத்தி ஒன்னே ஒன்னு சொல்றேன். அவர் இன்னும் விளையாடனும் என்று தான் மக்கள் எதிர்பார்க்க வேண்டுமே தவிர அவர் எப்போ போவாரு. ரிட்டையர் ஆவாரு அப்படினு எதிர்பார்க்க கூடாது.‌ எனக்கும் ரிட்டையர்ட் ஆகிட கூடாது என்று தான் இருந்தது. ஆனால் அந்த சூழ்நிலையை உருவாக்குறாங்களே?. அதற்காக நாம் ஒரு கிரிக்கெட்டரா அந்த முடிவை எடுத்து தான் ஆகனும். எப்போ சாகப்போற? எப்போ சாகப்போறனு கேட்குற மாதிரி இருக்கு. மக்கள் இதை புரிஞ்சுக்கனும்" என முரளி விஜய் பதில் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Former Cricketer Murali Vijay about CSK MS Dhoni Retirement | Sports News.