"கடவுளே அப்படி மட்டும் நடந்துடக் கூடாது..." கெயில் செய்த 'ட்வீட்'... ஒரே அடியாக கலங்கிப் போன 'ரசிகர்கள்'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Nov 02, 2020 10:04 PM

ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக வெளியேறிய நிலையில், அதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணியும் வெளியேறியது.

Chris gayle latest tweet makes his fans more emotional

சென்னை அணி தங்களது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே பஞ்சாப் அணி வெற்றி கண்டிருந்த நிலையில், காயம் காரணமாக அணியில் களமிறங்காமல் இருந்த அதிரடி வீரர் கெயில் அதன் பிறகு பஞ்சாப் அணிக்காக களம் கண்டார்.

கெயில் களமிறங்கிய பின் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதனால் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்த்த நிலையில், அதன் பிறகு ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி வெளியேறியது.

நல்ல வாய்ப்பை பஞ்சாப் அணி நழுவ விட்டதால் பஞ்சாப் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே, கெயில் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்துள்ள ட்வீட் ஒன்று அனைவரையும் மேலும் அதிர்ச்சிக்குள் ஆகியுள்ளது. அவரது பதிவில், 'எனது சீசன் முடிவுக்கு வந்தாலும் அனைவரும் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து பாருங்கள். நன்றி' என குறிப்பிட்டுள்ளார். 

 

இதனால் கெயில் அடுத்த சீசன் பஞ்சாப் அணியில் இடம்பெற மாட்டாரா என்ற கேள்வி எழுந்து ரசிகர்களை வருத்தத்திற்குள் ஆக்கியுள்ளது. இதன் காரணமாக, ரசிகர்கள் உருக்கமாக அந்த பதிவின் கீழ் கமெண்டுகளை செய்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chris gayle latest tweet makes his fans more emotional | Sports News.