"இதுக்காச்சும் 'OUT' குடுப்பீங்களா??..." THIRD 'UMPIRE'-ஐ வம்புக்கு இழுத்த 'ராகுல்'... 'சர்ச்சை'யை கிளப்பிய 'செயல்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Nov 01, 2020 07:05 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தற்போது மோதி வரும் நிலையில் பஞ்சாப் அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி சென்னை அணி ஆடி வருகிறது.

Kl rahul reaction towards third umpire creates controversy

சென்னை அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்நிலையில், சென்னை அணியின் தொடக்க வீரர் கெயிக்வாட் அடித்த பந்தை ஸ்லிப்பில் பஞ்சாப் அணி வீரர் மந்தீப் சிங் கேட்ச் செய்தார்.

மந்தீப் சிங் அவுட் என நினைத்து பஞ்சாப் அணி வீரர்கள் கொண்டாடிய நிலையில், விக்கெட்டில் குழப்பம் இருந்ததால் மூன்றாவது நடுவரிடம் முடிவு மாற்றப்பட்டது. அப்போது பந்தை ஆராய்ந்த மூன்றாம் நடுவர், அதனை அவுட் இல்லை என அறிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் போட்டி நடுவர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, ஜோர்டன் வீசிய ஓவரில் டு பிளஸ்ஸி ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது கேட்ச் செய்த ராகுல், மூன்றாம் நடுவரை பார்த்து இது அவுட் தானா என்று கேட்பது போன்று சைகை காட்டினார். மூன்றாம் நடுவரின் முடிவை விமர்சிப்பது போல ராகுல் செய்து காட்டிய செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

 

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kl rahul reaction towards third umpire creates controversy | Sports News.