Veetla Vishesham Others Page USA

ரூமில் காதலியுடன் இருந்த கணவன்..உறவினர்களுடன் சென்று கதவை தட்டிய மனைவி.. கொஞ்ச நேரத்துல நடந்த களேபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jun 15, 2022 07:56 PM

சத்தீஸ்கர் மாநிலத்தில் வேறு ஒரு பெண்ணுடன் பழகிவந்த ஆணை, அவரது மனைவி தாக்கிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Four arrested after man woman paraded without dress in Chhattisgarh

Also Read | "மாட்டுக்கு வைத்தியம் பார்க்கனும்னு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிவச்சிட்டாங்க சார்".. போலீசில் கதறிய கால்நடை டாக்டர்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது கோண்டகான் மாவட்டம். இங்கே உள்ள பழங்குடி கிராமத்தில் வசித்துவரும் ஒரு பெண் சமீப காலமாக தனது கணவரின் நடவடிக்கைகளை கவனித்துவந்திருக்கிறார். அப்போது, அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து கிளம்பிய தனது கணவரை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார் அவரது மனைவி.

கதவைத் தட்டிய மனைவி

ஏற்கனவே அந்த இளம்பெண்ணின் வீட்டில் அவ்வப்போது தனது கணவர் தங்கி வந்ததையும் அறிந்துகொண்ட அவரது மனைவி, தனது உறவினர்களிடம் இதுபற்றி பேசியிருக்கிறார். இந்நிலையில், மீண்டும் அந்த பெண்ணின் வீட்டுக்கு தனது கணவர் செல்வதை அறிந்து தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

அந்த இளம்பெண்ணின் வீட்டில் தனது கணவர் இருந்த நேரத்தில், சென்று வீட்டின் கதவை தட்டியுள்ளார் அவரது மனைவி. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கிறார். வீட்டுக்குள் சென்று அவரை சரமாரியாக தாக்கிய அவரது மனைவி அங்கிருந்த பொருட்களை உடைத்தாக சொல்லப்படுகிறது.

Four arrested after man woman paraded without dress in Chhattisgarhவழக்கு

இதனை தொடர்ந்து கணவரின் சட்டையை களைந்து ஊர்வலமாக அவரது மனைவி அழைத்துச் சென்றிருக்கிறார் இது போலீசுக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர் காவல்துறையினர். இந்நிலையில், தாக்குதலுக்கு ஆளான நபரின் மனைவி உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களின் மீது IPC இன் பிரிவு 354, 354 B, 509 A,B மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய நபர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு வந்த கணவரை அவர்து மனைவி தனது உறவினர்களுடன் சென்று தாக்கிய சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | 30 ஆயிரம் அடி உயரத்துல பறந்தபோது விமானத்துக்குள்ள பெய்த மழை.. உறைந்துபோன பயணிகள்..!

Tags : #CHHATTISGARH #WOMAN #ARREST #கணவன் #மனைவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Four arrested after man woman paraded without dress in Chhattisgarh | India News.