நாளை முதல் எவை இயங்கும்? எவை இயங்காது?... மத்திய அரசு அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 19, 2020 09:56 PM

கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி (நாளை) முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Lockdown: What Will Remain Open From Tomorrow? Details Here!

இதனை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

* ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.

* வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.

* மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.

* தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

* நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.

* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

* பொது வினியோகத்துறை செயல்படும்.

* மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.

* ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.

*அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.

* வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

* கட்டிட தொழில்களை தொடர அனுமதி.

* தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.

* அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு (ஹாட்ஸ்பாட்) பொருந்தாது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எவை இயங்காது?

*இ -வர்த்தகத்தில் அத்தியாவசியமற்ற சேவைகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி,  மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களை இ வணிகம் மூலம் பெற முடியாது.

* சினிமா திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், மால்கள், மத வழிபாட்டுக் கூடங்கள் உள்ளிட்டவைக்கு மே 3-ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை.