"1 வாரத்தில் 20 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யணும்!".. அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி!.. என்ன நடக்கிறது டெல்லியில்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jun 14, 2020 05:25 PM

டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக அடுத்த ஒரு வாரத்தில் 20 ஆயிரம் புதிய படுக்கைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

delhi cm arvind kejriwal orders to arrange 20k beds in a week

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 195 ஆக உயர்ந்து உள்ளது.

நாட்டில், கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களின் வரிசையில் மராட்டியம், தமிழ்நாடு ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது.

டெல்லியில் 38 ஆயிரத்து 958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் 14 ஆயிரத்து 945 பேர் சிகிச்சை முடிந்து சென்று உள்ளனர். 22,742 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,271 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 20 ஆயிரம் புதிய படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யும்படி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்காக ஓட்டல்களில் 4 ஆயிரம் படுக்கைகளும், விருந்து அரங்கங்களில் 11 ஆயிரம் படுக்கைகளும் மற்றும் நர்சிங் ஹோம்களில் 5 ஆயிரம் படுக்கைகளும் தயார் செய்யும்படி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Delhi cm arvind kejriwal orders to arrange 20k beds in a week | India News.