மல்டிபிளக்ஸ் மற்றும் தனி தியேட்டர்களில் 100% இருக்கை தொடர்பாக வெளியான 'மத்திய அரசின் ‘முக்கிய’ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Behindwoods News Bureau | Jan 31, 2021 11:34 AM

மார்ச் மாத இறுதியில் திரையரங்குகள் மூடப்பட்டன. 7 மாதங்களுக்கு மேல் திரையரங்கு மூடப்பட்டிருந்ததால் ஊழியர்கள் தொடங்கி, உரிமையாளர்கள் வரை பலரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகினர்.

central govt important announcement over 100% seats in theatre

அதேபோல் திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  பின்னர் மூடப்பட்ட தியேட்டர்களை அக்டோபர் 15-ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனாலும், தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படாமல் இருந்தது.

இதனிடையே வெளியான அடுத்த ஊரடங்கு அறிவிப்பில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனைத்து திரையரங்குகளையும் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்களை அமரவைத்து பார்வையாளர்கள் அனுமதிக்கப் படலாம் என  தமிழக அரசு அறிவித்தது. இதனிடையே விஜயின் மாஸ்டர் படம் வெளியான பொங்கல் சூழலில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், பிப்ரவரி 1- ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. ‘மல்டிபிளக்ஸ் மற்றும் தனி தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Central govt important announcement over 100% seats in theatre | India News.