Battery
www.garudabazaar.com

அஜித்தை பார்க்க கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்.. அஜித்தின் செயலால் நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித், திருச்சி ரைபிள் கிளப்பில் கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்மணியை சந்தித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Ajith Kumar Meet Children and Women fans at Trichy KK Nagar Rifle Club

Also Read | "நான் ஏதோ பெருசா சாதிச்சுட்டேன்னு சொல்றாங்க".. பிரபுதேவா பட சீனையே ரீல்ஸ் செய்த வரலஷ்மி.!

நேற்று முன்தினம் நடிகர் அஜித்குமார் சென்னைக்கு அருகில் உள்ள மொரை வீரபுரம் போலீஸ் பயிற்சி மைய அகாடமியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். அங்குள்ள காவலர்களிடம் அஜித் உரையாடும் வீடியோ  வெளியாகி வைரலானது.

மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகர் ஆயுதப்படை ரிசர்வ் கேம்பஸில் கடந்த  (26.07.2022) அன்று துவங்கி உள்ளது.

Ajith Kumar Meet Children and Women fans at Trichy KK Nagar Rifle Club

இதற்காக நடிகர் அஜித் குமார் சென்னையில் இருந்து திருச்சி ரைஃபிள் கிளப் சென்றுள்ளார். அங்கு துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் நேற்று கலந்து கொண்டார். போட்டிகள் முடிந்ததும் நேற்றிரவு நடிகர் அஜித் குமார்  சென்னை திரும்பினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கி சுடும் போட்டிகள் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Ajith Kumar Meet Children and Women fans at Trichy KK Nagar Rifle Club

இந்நிலையில் நேற்று போட்டி நடக்கும் இடத்தில் காலை முதலே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர்‌. இச்சூழலில் ரைபிள் கிளப் கட்டடத்தின் மேல் ஏறி நடிகர் அஜித் ரசிகர்களை நோக்கி கையசைத்தார்‌. குழுமியிருந்த ரசிகர்களுக்கு இரு கைகளை சேர்த்து முத்தமும் கொடுத்தார்.

அப்போது அங்கு உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி நின்ற ரசிகர்களை நோக்கி இறங்கச் சொல்லி சைகை செய்தார். உடனே ரசிகர்கள் அஜித்தின் குறிப்பை உணர்ந்து உடனடியாக மின்மாற்றியை விட்டு கீழே இறங்கினர்.

Ajith Kumar Meet Children and Women fans at Trichy KK Nagar Rifle Club

தொடர்ந்து ஒரு நிமிடம் அஜித் கட்டிடத்தின் மாடியில் நின்று ரசிகர்களுக்கு வணக்கம் வைத்தார். பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கி போட்டி நடக்கும் அரங்கினுள் சென்றுவிட்டார்.

பின்னர் இரவு 9 மணிவரை ரசிகர்கள் குழுமியிருந்தனர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து ரசிகர்களை களைந்து செல்ல கோரிக்கை விடுத்தனர். பின்னர் அஜித் மீண்டும் ரசிகர்களை சந்தித்தார்.

Ajith Kumar Meet Children and Women fans at Trichy KK Nagar Rifle Club

அப்போது கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்மணியை காவல்துறை ஒத்துழைப்புடன் அஜித் சந்தித்தார். அப்போது அந்த பெண்மணியின் மற்றொரு குழந்தையை தோளில் தூக்கி கொஞ்சினார். அஜித்தின் இந்த செயலால் நெகிழ்ச்சியான குடும்பம் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இந்த வீடியோக்கள் & புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | "புதுசா மாடு வாங்கி இருக்கோம்.." Biggboss பாலாஜி வெளியிட்ட வீடியோ.. "இத இப்டி கூட சொல்லலாம் போலயே"

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Meet Children and Women fans at Trichy KK Nagar Rifle Club

People looking for online information on Ajith Kumar, AjithKumar With his fans, Trichy KK Nagar Rifle Club will find this news story useful.